திங்கள், 8 நவம்பர், 2010

கணக்கில் வருமா கருப்பு?


கருப்பு பணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடக்கிப் போடும் விஷப்பாம்பு. வெளிநாடுகளின் வங்கிகளிலும் பெரிய பெரிய மாளிகைகளின் ரகசிய அறைகளில் தங்கம், வெள்ளிக் கட்டிகளாகவும் முடங்கிக் கிடக்கிறது பல ஆயிரம் கோடி கருப்பு பணம். சமீப காலமாக ரியல் எஸ்டேட் துறையில் ஏகத்துக்கும் கருப்புப் பணம் புழங்குவதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.72 ஆயிரம் கோடி அளவுக்கு ரியல் எஸ்டேட்டில் பணம் புழங்குகிறது. இது ஆண்டுக்கு 30 சதவீதம் வரை உயர்ந்து கொண்டே வருகிறது. ஆசிய நாடுகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதிகரித்து வரும் விலை காரணமாக, எப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இத்துறையில் குதிக்கின்றன. மற்ற எந்த துறையிலும் இந்த அளவுக்கு கருப்பு பணம் புழங்குவதில்லை. வீடோ, நிலமோ வாங்கும்போது, பத்திரச் செலவைக் குறைக்கும் நோக்கில் சொத்தின் மதிப்பு குறைத்து மதிப்பிடப்படுகிறது. மீதத் தொகை கருப்புப் பணம். கணக்கில் வராது. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், கோல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் இடம் கிடைக்காது. அதனால் என்ன விலை கொடுக்கவும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் பெரிய பில்டர்களும் தயாராக உள்ளனர். இப்படி கொடுக்கும் தொகையில் பாதிக்குப்பாதி கருப்புப் பணம்தான். கடந்த டிசம்பரில் வருமான வரித் துறையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்திரூ4,500கோடி கருப்புப் பணத்தை கைப்பற்றினர். இதில் ரூ2 ஆயிரம் கோடி வரை ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
வருமான வரி அதிகமாக இருப்பதால்தான் கணக்கு காட்டாமல் மறைத்து, கருப்பு பணம் கோடிக் கணக்கில் உருவாகிறது. சம்பாதிப்பதில் பாதிக்குப் பாதி கருப்புப் பணமாக பதுக்கப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் கணக்குப்படி 22.50 லட்சம் கோடி கருப்புப்பணம் புழங்குகிறது. 2006ம் ஆண்டு நிலவரப்படி, 1.40 லட்சம் கோடி அளவுக்கு இந்தியர்களின் கருப்புப்பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கிறதாம். ம¦தமுள்ள 20 லட்சம் கோடி தங்கக் கட்டிகளிலும் நிலங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது. இந்தப் பணம் கணக்கில் வந்தால், இந்தியா எப்போதோ வல்லரசாகி இருக்கும்.

தமிழில் மருத்துவ தளங்கள் --


ஒரு வரி கருத்து: கடவுள் தீயவர்களை மன்னித்து விடுகிறார் ஆனால் எப்போதும் அல்ல.

வணக்கம் நண்பர்களே நான் இங்கு சில தமிழ் மருத்துவ தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் ஒரு வேளை இந்த தளங்கள் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் தெரியாத நண்பர்க்ள் சிலர் இருப்பார்களேயானால் அவர்களுக்கு உதவட்டுமே என்கிற நோக்கம் மட்டுமே. இந்த காலத்தில் நிறைய விதமான நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன ஒரு விதத்தில் நம் உணவு முறையும் இதற்கு காரணம் இது யாவருக்கும் தெரியும் ஆனாலும் நாம் நம்மை மாற்றிக்கொள்வதில்லை. நாம் எடுத்த்தெற்கெல்லாம் நாம் மருத்துவமனை செல்லமுடிவதில்லை ஆனால் நமக்கு அந்த குறையை போக்குவதற்கென்றே எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் அவர்களுக்கு இருக்கும் நேரமின்மையிலும் தமிழில் மருத்துவ தகவல்களை என்னைப்போல சராசரி மனிதனுக்கும் புரியும் வகையில் மருத்துவ தகவல்களை எழுதுகிறார்கள்.

மதிப்பிற்குறிய நண்பர் திரு.துமிழ் அவர்களின் தளத்தில் எல்லாவிதமான பொதுமருத்துவம் சம்பந்தமான எல்லா தகவல்களையும் பதிகிறார் அதுமட்டுமல்லாமல் நமக்கு இருக்கும் சந்தேகத்தையும் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதற்கும் பதில் அளிக்கிறார் கொஞ்சம் நேரம் அதிகம் எடுத்துக்கொண்டாலும் அவர் அளிக்கும் தகவல்கள் நமக்கு புரியும் வகையில் இருக்கும். அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

திரு.துமிழ் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



அடுத்ததாக மதிப்பிற்குறிய நண்பர் திரு.ராஜ்மோகன் அவர்களின் தளத்தில் குழந்தைகளுக்கன மருத்துவ தகவல்கள் பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம் ஆனால் இன்னும் அவர்கள் மின்னஞ்சல் வழி சந்தேகம் கேட்கும் வசதி தருவார்களேயானால் குழந்தைகளுக்கான சிறந்த மருத்துவ தளம் என்பதில் சந்தேகமில்லை. அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

திரு.ராஜ்மோகன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



அடுத்ததாக தமிழ் கன்சல்ட் தளம் இங்கு நான்கு மருத்துவர்கள் நமக்கு உதவி செய்வதெற்கென்றே இருக்கிறார்கள் இவர்களும் இந்த மருத்துவ சேவையே இலவசமாகவே செய்கிறார்கள் இவர்களை பொறுத்த வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கலாம் ஆனால் தமிழையே அவர்கள் முதன்மைபடுத்துகிறார்கள் ஆனால் சில இடங்களில் பதில் முழுவதையும் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் அது ஒரு குறையாகத்தான் நான் நினைக்கிறேன் ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்கள் புரிந்துகொளவதில் பிரச்சினையும் இருக்கும் ஆனால் அந்த குறையை களைந்தால் இது சிறந்த தமிழ் மருத்துவ தளம் தான். அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

தமிழ் கன்சல்ட் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



அடுத்ததாக ஆயுர்வேத மருத்துவ தகவல்களை ஆயுர்வேத மருத்துவம் எனும் தளத்தில் பொதுவான மருத்துவ தகவல்களை பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம் மின்னஞ்சல் தொடர்பு கொடுத்திருக்கிறார் அவரின் இலட்சிய கணவாக ஆயுர்வேத 50 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை அமைக்க விரும்புவதாக எழுதியிருக்கிறார், பயன்படுத்தி பாருங்கள் சிறந்த தளமாக இருப்பின் அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

ஆயுர்வேத மருத்துவ தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



என்ன நண்பர்களே நான் எனக்கு தெரிந்த தளங்களை பகிரிந்திருக்கிறேன் இது போல் சிறந்த தமிழ் மருத்துவ தளங்கள் இருந்தால் அவசியம் கருத்துரையில் தெரிவிக்கவும் நான் அதை அப்டேட் செய்துவிடுகிறேன் அனைத்து தளங்களின் முகவரிகளும் ஒரு இடத்தில் இருந்தால் எல்லொருக்கும் மருத்துவ சந்தேகங்கள் தீர உதவியாய் இருக்கும்.

குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


வாழ்க வளமுடன்

Thanks to Mr. P Moorthy

ஞாயிறு, 7 நவம்பர், 2010

Haniya Rayan Picture

Rayan Pic

பெற்றோர்கள் செய்யக்கூடாதவை

பல பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது கலை அல்ல.
எஸ் வீ சேகர் ஒரு ட்ராமல சொல்வது போல,” நீ வளர்க்காட்டியும்
நானே வளர்ந்திருப்பேன்” என்ற நிலைதான். மாரல் ஸ்டடி வகுப்புக்களும்
இல்லை, வீட்டிலும் சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை எனும்
நிலையில் ஒரு தலைமுறையே முறையாக வளர்க்கப்படாமல்
போய்விட்டது.

நாம் செய்யக்கூடாதவை என்னென்ன என்று தெரிந்து விட்டால்
செய்யக்கூடியவை புரிந்துவிடும். பெற்றோர்கள் நல்ல பிள்ளைகளை
வளர்க்க இது உதவும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.


1.குழந்தை ஆசையா சொல்லணும்னோ, பேசனும்னோ
வந்தா ”நான் பிசியா இருக்கேன் அப்புறம் பேசலாம்”!,
மேல விழுந்து கொஞ்சனமாக்கும் தள்ளி நின்னு அப்படின்னுல்லாம்
பேசக்கூடாது. அம்மா, அப்பா, தன்னை தவிர்க்கிறார்கள்,
உதாசினப்படுத்துகிறார்கள் எனும் எண்ணம் விதைக்கப்படுகிறது.


2. பெல்டால அடி, குட்டு, கிள்ளுவது, கைல கிடைச்சதால அடி
இவை physica abuse வகை. இவை தரும் நேர்மறை விளைவுகள்.

3. அடிப்பது குத்தம். வாய்க்கு வந்தபடி திட்டுவது மஹா கொடுமை.
நம் நாட்டில் பிள்ளைகளை அடிப்பது, திட்டுவது இன்னமும் குற்றமாக
இல்லை. மேலை நாடுகளில் எங்கப்பா அடிச்சார், அம்மா திட்டினாங்கன்னு
போலிஸ்ல கேஸ் போட முடியும். நம்ம நாட்டுல அந்த வசதி
இல்லை என்பதற்காக வரைமுறை இல்லாமல் திட்டுவது
“தீயினாற் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்டவடு”ஆகிப்போகும்னு
வள்ளுவர் சொல்லி வெச்சிருக்கார்.

4.” நான் பெத்தது சரியில்லீங்க!!!” ”இதெல்லாம் நாளைக்கு
எனக்கு சோறா போடப்போகுது!!” இதெல்லாம் தன் மனக்குறையை
அடுத்தவங்க கிட்ட சொல்லிக்கிறா மாதிரி பெத்தவங்க பேசுவது.
ஆனா இது தவறு. நம்ம பிள்ளையை பத்தி நாமே குறையா
அடுத்தவங்க கிட்ட சொல்லக்கூடாது. அதே சமயம் ரொம்பவும்
புகழ்ந்தும் சொல்லக்கூடாது.

“தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள்”
என்பதையும் மறக்கக்கூடாது.

5. இந்த உலகத்துல ஒண்ணு கூட சரியில்லை, “உங்கம்மா
ஒரு உதவாக்கரை!!” உங்கப்பனுக்கு மூளையே வேலை செய்யாது”
”நீ பைசா ப்ரோயஜன்ம் இல்லாதவன்” இப்படி அடுத்தவர்
பற்றியோ பிள்ளைகள் பற்றி பிள்ளைகளிடமோ குறை சொல்வதும்
ஆகாது.

6. அடுத்தவங்களைப் பத்தி பேச வாய்ப்பு கிடைச்சா போதும் மக்களுக்கு.
இதுல எதுத்து பேச முடியாத பிள்ளைகளை பத்தி விமர்சனம்
செய்ய தயங்கவும் மாட்டாங்க. அந்த விமர்சனங்கள் அவர்களின்
வளர்ச்சியை ரொம்பவே பாதிக்கும்.

7. நம் கனவுகளை சுமக்க பிறந்தவங்க இல்லை பிள்ளைகள்.
அவர்கள் விரும்பும் படிப்பு,வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
நாம் சொல்லுவதை கேட்க வேண்டுமென அடம் பிடிக்கக்கூடாது.

8. அம்மா, அப்பா சண்டை போட்டுக்கொள்ளும் சூழ்நிலையில் வளரும்
குழந்தை பாதுக்காப்பின்மையாக உணர்ந்து கூனிக்குறுகி முன்னேர
முடியாமல் போகும் வாய்ப்பிருக்கிறது. இல்லையேல் முரட்டுத்தனமாக
மாறிவிட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

9. பசங்க சின்னவங்க என்பதால் அவங்க செய்வது எல்லாமே
தவறா இருக்கணும்னு சட்டமில்லை. அவர்களின் செயல்கள்,
பேச்சுக்கள், நடவடிக்கைகள், எல்லாவற்றையும் தவறாகவே
புரிந்துக்கொள்ளக் கூடாது.

10. ”என் பையன் எதிர்காலம் என்னாகுமோ!!”
“நாளைக்கு அவங்க என்ன ஆவாங்களோ!!”
“எஞ்சினியரிங், டாக்டர் படிகாட்டி கை நிறைய்ய
சம்பாதிக்க முடியாதே” போன்ற தேவையில்லாத வருத்தங்கள்
பட வேண்டாம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

11. பிள்ளைகள் விரும்பியதை அவர்கள் அடைந்தே தீர்வார்கள்
எனும் நம்பிக்கை நமக்கு முதலில் இருக்க வேண்டும்.

12. பிள்ளையின் கனவை நனவாக்க நமது தூண்டுகோல்(சுடர்
விளைக்கைத் தூண்டும் தூண்டுகோல் போல)இருக்க வேண்டும்.
அவர்கள் சோர்வுறும் தருணத்தில் ஆதரித்து, பேசி
முன்னேற்றப்பாதையில் நடக்க வைக்க வேண்டும்.

13. ”வயசாகிடுச்சு இன்னும் என்ன அம்மாவை கட்டிகிட்டு”
”வயசு வந்த பொண்ணு அப்பனை கட்டிக்கிறது எல்லாம்
எங்க காலத்துல இல்லை” எனும் பேச்சுக்களை கேட்டிருப்போம்.
நம் பிள்ளைகளை நாம் கட்டியணைத்து, பேசினால் அவர்களின்
தன்னம்பிக்கை வளரும். வசூல் ராஜா எம்பீபீ எஸ் பரிந்துரைத்த
”கட்டிப்பிடி வைத்தியம்” ரொம்ப முக்கியம். நம் குழ்ந்தைகளிடம்
மட்டும்.

14. அன்றாட வாழ்க்கையில் பசங்களின் நடவடிக்கை, பேச்சு,
ஆகியவைகளை கண்காணிப்பது அவசியம். ஏதும் மாறுதல் இருந்தால்
அட்வைஸ் மழை பொழியாமல் நட்புடன் பேசுவது போல பேசி
கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

15. ”உபகாரம் செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாம இருந்தா
போதும்னு!!” பெரியவங்க சொல்லியிருக்காங்க. பசங்களின்
வளர்ச்சிக்கு உதவும் வார்த்தைகள் சொல்லாட்டியும் அவர்களை
Demotivate செய்யும் வார்த்தைகளை பேசாமல் இருப்பது உசிதம்.


16. பெரிய தவறுகள் செய்தால் தண்டனை அவசியம்.
சின்ன சின்ன தவறுகளுக்கும் பெரிய பெரிய தண்டனை கொடுத்தால்
தண்டனையில் தன் தவறை புரிந்து கொள்வது போய் பிள்ளை
முரடாக தயாராக வாய்ப்பிருக்கிறது. தண்டனை தவறாக புரிந்து
கொள்ளப்படும்.

நாம் தவறு செய்திருக்கிறோம், அதை மறுமுறை
செய்யக்கூடாது என அறிவுறுத்தத்தான் தண்டனை.
அந்த பாடத்தை அவர்கள் புரிந்து கொண்டால் நமக்கு
பிரச்சினையே இல்லை.

செய்யக்கூடாதது தெரிந்து கொண்டதால், நாம் செய்ய வேண்டியது
தெளிவாக புரிந்து கொள்ள வசதி. நல்ல பெற்றோராக
பிள்ளையின் வளர்ச்சிக்கு உதவுவோம்.


சிவகாசிராம்குமார் எனும் இந்த நண்பரின் தளத்தில்
பல விடயங்கள் இருக்கின்றன. பாருங்களேன்.